• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

இட ஒதுக்கீடு

YG மதுவந்தியின் பேட்டியில் சொன்னதும் சொல்லாததும்

August 18, 2019

YG மதுவந்தியின் பேட்டியில் சொன்னதும் சொல்லாததும்! சொன்னது: பார்ப்பனர்கள் வைதீகப் பணியாற்றாவிட்டாலும் பார்ப்பனர்கள் தான். சொல்லாதது: சூத்திரர்கள் படித்தாலும் உயர் பதவிகளுக்குச் சென்றாலும் பணம் வைத்திருந்தாலும் சூத்திரர்கள் தான். சொன்னது: பார்ப்பனர்கள் கோயில்களில் கூட்டிப் பெருக்கும் வேலைகளில் ஈடுபடுட்டுள்ளார்கள். சொல்லாதது: கோயில்களில் அந்தப் பணிகளுக்கு மற்ற சாதிகளை அனுமதித்தால் தீட்டு ஆகி விடும். சொன்னது: கழிப்பறைப் பணி செய்யும் பார்ப்பனர்கள் உள்ளார்கள். சொல்லாதது: அரசில் உள்ள துப்புரவுப் பணிகளைக் கூட ஆட்டையைப் போடும் பார்ப்பனர்கள் அதை தலித்களுக்குக் […]

Filed Under: சாதி, இட ஒதுக்கீடு

என்ன இருந்தாலும் இந்த ஏழை அர்ச்சகர்கள் பாவம் இல்லையா?

August 18, 2019

கேள்வி: என்ன இருந்தாலும் இந்த ஏழை அர்ச்சகர்கள் பாவம் இல்லையா? பதில்: பாவம் தான். ஆனால், அவர்கள் ஏழைகளாக தொடர ஒரே காரணம் பணக்கார அர்ச்சகர்கள் தான். எப்படி என்கிறீர்களா? ஏழை மீனவராகப் பிறந்த அப்துல் கலாம் படிப்பால் உயர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஆக முடிகிறது. ஒருவர் ஏழை விவசாயி மகனாகப் பிறந்தாலும் ISRO தலைவர் கூட ஆக முடிகிறது. ஆனால், ஒரு ஏழை அர்ச்சகர் வேதம் படித்து பக்தி, திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு கொண்டிருந்தாலும் ஏன் […]

Filed Under: இட ஒதுக்கீடு

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்?

August 13, 2019

கேள்வி: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்? பதில்: ஆளானப்பட்ட Avengers Supermanஆக இருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை, ஆளுக்கு ஒரு கிரகம் என்று பிரித்துத் தான் சண்டை போடுகிறார்கள். நடப்பது ஆரிய திராவிடப் போர். இதில் பல போர் முனைகள் உள்ளன. ஒரு ஆள் ஒரு நேரத்தில் ஒரு களத்தில் போராடுவது தான் புத்திசாலித்தனம். இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருக்கிறது. அதில் இருந்து திசை திருப்ப காஷ்மீர் […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள்.

August 13, 2019

பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். இதற்கு முன்பு Associate Professorஆகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தான் Professor பணிக்குத் தேர்வாவார்கள். இந்தப் பணிகளுக்குப் பரிந்துரைக்கும் சம்பளம் என்ன என்பதையும் படத்தில் காணலாம். ஏற்கனவே மாதம் 2 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் Associate Professor ஒருவர் எப்படி ஏழை ஆவார்? அதெல்லாம் தெரியாது பாஸ்! மோடி சொன்னார்! நாங்க உயர் சாதியினருக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்போம்! இனி எல்லா […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

OBC/BC/MBCக்கள் ஏன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார்கள்?

August 13, 2019

கேள்வி: OBC/BC/MBCக்கள் ஏன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார்கள்? தலித்களைச் சுட்டாமல் தங்கள் சாதிக்கு நேர்ந்த இழிவுகளைச் சுட்டி இட ஒதுக்கீடு கோர முடியாதா? பதில்: ஏதோ திராவிடத்துக்கு இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று தெரியாதது போலவும், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து தலித்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு, அதைச் சுட்டி OBCக்கள் இட ஒதுக்கீடு கேட்பதாக நினைப்பதாலுமே இந்தக் குழப்பம். திராவிடம் எப்போதும் பார்ப்பனர் எதிர் பார்ப்பனர் அல்லாதார் என்றே அரசியலைக் கட்டமைத்தது. தலித்கள் உட்பட்ட […]

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

இதற்குப் பெயர் தான் மனுநீதி!

August 13, 2019

கல்லூரிப் படிப்பு முடித்த 10% பிராடு ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பக் கட்டணங்களைப் பாதியாக்குவார்கள். உண்மையிலேயே ஏழைகள் நிறைந்துள்ள SC/STகள் பத்தாவது படிப்பதற்கே தேர்வுக் கட்டணத்தை 24 மடங்கு கூட்டுவார்கள். இதற்குப் பெயர் தான் மனுநீதி! https://timesofindia.indiatimes.com/home/education/news/cbse-hikes-exam-fees-for-sc/st-pupils-by-24-times-general-category-to-pay-double/articleshow/70629330.cms?fbclid=IwAR1yvC3YEu2KJJcx_IEe7mU7oEgdwfbmJi1ZB3JQ8AvCRyIcwspdcHl3jnw பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: சாதி, இட ஒதுக்கீடு

மோடி அரசில் 89 செயலாளர்கள்

August 13, 2019

மோடி அரசில் 89 செயலாளர்கள். இவர்களுள் SC – 1ST – 3OBC – 0 இட ஒதுக்கீட்டின் மூலம் எல்லோரும் பணியில் சேரும் போது, உயர் சாதியினர் மட்டும் உயர் பொறுப்புகளைப் பெறுவது எப்படி? இது தான் சாதிப் பாகுபாடு. அதனால் தான் பதவி உயர்வுகளில் கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால், நடப்பது என்ன? ஏற்கனவே உயர் சாதியினர் ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுத்துள்ள அதிகாரத்தில் அவர்களுக்கு மேலும் 10% இடத்தை உறுதி […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!

July 30, 2019

அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்! அது என்ன காரணம் என்று அஞ்சல் துறை தெளிவுபடுத்த வேண்டும். SC, ST, OBC வேலை எதுவும் இப்படி காலியாக இல்லை. ஒரு வேளை, அரிய வகை ஏழைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ? இனிமேல் பிறந்து வரப் போகிற முன்னேறிய சாதியினர் யாரும் 42க்கு கீழாக மதிப்பெண் பெற்றால் தருவார்களோ? பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவு

July 29, 2019

பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவைப் பாரீர்! SCஐ விடக் குறைவான மதிப்பெண், 196/720 நீட் மதிப்பெண் பெற்ற அரிய வகை ஏழைகளுக்கு எல்லாம் இடம் உறுதி! அதாவது, அனிதாவுக்குக் கிடைக்காத இடம் ஸ்வாதிக்குக் கிடைக்கும்! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!

July 29, 2019

துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!செத்தது சமூக நீதி!—————————————–அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off! இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது! அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள். Cut-off விவரம் (Out of 100): EWS என்னும் உயர் […]

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

  • « Go to Previous Page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Page 5
  • Page 6
  • Interim pages omitted …
  • Page 16
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2381