• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

இட ஒதுக்கீடு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாமே?

October 3, 2018

கேள்வி: பொருளாதார அடிப்படையில் ஏன் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது? பதில்: ஒருவரிடம் பணம் இல்லை என்றால் அவருக்கு வங்கிக் கடன், கல்வி உதவித் தொகை தாருங்கள். ஏன் அவர் வாழ்நாளுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம் என்று கூட திட்டம் கொண்டு வாருங்கள். வேலை பார்க்க சம்பளமே தராவிட்டாலும் கூட பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்த்து யாருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு தர மறுக்கிறார்களோ அவர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் போராட்டம் […]

Filed Under: இட ஒதுக்கீடு

Communal G.O.

October 2, 2018

உங்களுக்குத் தெரியுமா? இந்திய விடுதலைக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 100% இட ஒதுக்கீடு இருந்தது. அதில் பார்ப்பனர்களுக்கு 17% தனி ஒதுக்கீடு இருந்தது! இந்த இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இல்லாமல் இசுலாமியர், கிறிஸ்தவர்/ஆங்கிலோ இந்தியர், இந்துக்கள் என்று வகுப்பு வாரியாக (Communal G.O) அமைந்திருந்தது. . 1947ல் தான் மதராஸ் மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத் தனியாக 14% இட ஒதுக்கீடு அளித்தார்கள். ஆனால், 1927 முதலே மக்கள் தொகையில் 3% மட்டுமே இருந்த […]

Filed Under: இட ஒதுக்கீடு

ISRO இட ஒதுக்கீடு மோசடி

October 2, 2018

நாட்டின் உயர் ஆய்வு நிறுவனமான ISRO வின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு மோசடி! பொதுப்பிரிவு இடங்களை மொத்தமாகச் சுருட்டும் ஆதிக்கச் சாதிகள்! அதுவும் அவர்கள் அதிகமாக வேலைக்கு எடுக்கும் Electronics, Mechanical, Computer Science பிரிவுகளில் இட ஒதுக்கீடே இல்லை. குறைவான ஆட்களை எடுக்குப் பிரிவுகளில் மட்டும் இட ஒதுக்கீடு. அதிலும் மோசடி. ISROவே இப்படித் தான் என்றால் நாடு முழுக்க இது தான் நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இட ஒதுக்கீட்டால் தரம் குறைகிறது […]

Filed Under: இட ஒதுக்கீடு

எங்கெல்லாம் இட ஒதுக்கீடு இல்லை?

October 2, 2018

எனக்குத் தெரிந்து, இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத துறைகள் மூன்று: * இராணுவம் * மாநில உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதி மன்றம் * ISRO போன்ற உயர் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் வேறு எங்கெல்லாம் இல்லை? பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

தகுதி தரம் திறமை

September 30, 2018

கேள்வி: இட ஒதுக்கீட்டால் தகுதி, தரம் பாதிக்கப்படாதா? பதில்: இந்த தகுதி, தரம், திறமை என்பதே ஒரு ஏமாற்று வாதம் என்று அறிஞர் அண்ணா, அம்பேத்கர் இருவருமே தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கர் ஒரு படி மேலே போய் தகுதி பற்றிய பேச்சு ஒரு fetish என்கிறார்! எப்படி? ஒரு பேருந்தை ஓட்ட ஆள் வேண்டும் என்றால் அவரிடம் பேருந்து ஓட்டுநருக்கான உரிமம் இருந்தால் போதும். மைக்கேல் சூமாக்கர் தான் உலகத்திலேயே சிறந்த ஓட்டுநர் என்று நாம் அவரை அழைத்து […]

Filed Under: இட ஒதுக்கீடு

அணையை உடைக்கிறார்கள். வெள்ளம் என்ன செய்யும் என்பதை அறியாமல்!

September 30, 2018

1949. நீதிக் கட்சி நடைமுறைப்படுத்தி இருந்த Communal G.O. என்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றத்தில் தோற்கடிக்கிறார்கள் பார்ப்பனர்கள். அறிஞர் அண்ணா சொல்கிறார். “அணையை உடைக்கிறார்கள். வெள்ளம் என்ன செய்யும் என்று அறியாமல்” அன்று அவர் எழுதிய கட்டுரை நீட் தீர்ப்புக்குப் பிறகான காலகட்டத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. வரலாறு திரும்புகிறது. இங்கு எதுவுமே புதிதில்லை. தகுதி, தரம், திறமை என்பது ஈராயிரம் ஆண்டு கால மோசடி. ஆதாரம் – திராவிட நாடு, 27-2-1949 கட்டுரை, சாதி அடிப்படையில் […]

Filed Under: இட ஒதுக்கீடு

திராவிடர் படித்த பள்ளிகள்

September 30, 2018

கேள்வி: அந்தக் காலத்தில் நம்மை எல்லாம் படிக்க விட வில்லை என்பதை நம்ப முடியவில்லையே? ஒரே ஒரு பள்ளிக் கூடத்தில் கூடவா திராவிட மாணவர்கள் கூடுதலாகப் படிக்கவில்லை? பதில்: படித்தார்கள். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மட்டும். ஆதாரம் – கல்வி நீரோடை, இட ஒதுக்கீடு பற்றி அறிஞர் அண்ணா 30.06.1946 அன்று திராவிட நாடு இதழில் எழுதிய கட்டுரை. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்? என்னும் நூலில் இருந்து. பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

துரத்தும் தீண்டாமை. தீட்டான சிலை!

September 30, 2018

1970. ஜகஜீவன் ராம் என்ற இந்திய ஒன்றிய அமைச்சர் முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வரின் சிலையைத் திறந்து வைக்கிறார். ஜகஜீவன் ராம் பட்டியல் இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர் திறந்து வைத்த சிலைக்குத் தீட்டு கழிக்கப்பட்டது. இது தான் இந்தியா. ஒருவர் அமைச்சர் ஆனாலும் IAS அதிகாரி ஆனாலும் சாதியும் தீண்டாமையும் அவரைத் துரத்தும். இதனால் தான் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. “Untouchability is deeply ingrained in us. An individual can […]

Filed Under: இட ஒதுக்கீடு

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஏன்?

September 29, 2018

கேள்வி: கல்வியில் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதாதா? ஏன் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு? பதில்: ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்துச் சமூகங்களுக்கும் வேலை கொடுத்து அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்கப் புள்ளியாக கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. 1900களில் படித்த ஆளே இல்லை என்று தான் எல்லா வேலைகளையும் ஆதிக்கச் சாதிகள் சுருட்டினார்கள். இப்போது அனைவரும் படித்து வந்த பிறகு, தகுதியான ஆட்கள் இல்லை என்று […]

Filed Under: இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு – தமிழர் இந்தியாவுக்காக போராடிப் பெற்ற உரிமை

September 26, 2018

உங்களுக்குத் தெரியுமா? 1921. இந்தியாவிலேயே முதன்முறையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றியது. இதைச் செய்தது மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி. திராவிட இயக்கத்தின் முன்னோடி. 1951. இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லும் என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சம்பகம் என்ற பார்ப்பனர் ஒருவர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். பெரியார் இந்தத் தீர்ப்புக்கு எதிராக […]

Filed Under: இட ஒதுக்கீடு

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 12
  • Page 13
  • Page 14
  • Page 15
  • Page 16
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1540